முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

அவதூறு வழக்கு: ஜன-18ல் விஜயகாந்த் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை விருதுநகரில் அவதூறாக பேசிய வழக்கில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், 2013 ஜனவரி 18-ம்

News image
Updated On :5 டிசம்பர் 2012, 2:34 pm

கோ.ஜெயக்குமார்

 தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை விருதுநகரில் அவதூறாக பேசிய வழக்கில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், 2013 ஜனவரி 18-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதி ஆர்.கிருஷ்ணமூர்த்தி புதன்கிழமை உத்தரவிட்டார்.
விருதுநகரில் 3.8.11-ம் தேதி பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசும் போது தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை அவதூறாக பேசினாராம். இது குறித்து விருதுநகர் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞர் ஏ.மங்களசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை புதன்கிழமை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.கிருஷ்ணமூர்த்தி, விஜயகாந்த் வழக்கு விசாரணைக்கு 2013 ஜனவரி 18-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.