விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நடத்தையில் சந்தேகம்: உடன் இருந்த பெண்மணியைக் கொன்றவர் போலீஸில் சரண்

மதுரை அவனியாபுரம் அருகே தோடநேரி என்ற இடத்தில் உடன் இருந்த பெண்மணியைக் கொன்றவர் பின்னர் போலீஸில் சரண் அடைந்தார்.

News image
Updated On :5 டிசம்பர் 2012, 7:56 am

மது

மதுரை அவனியாபுரம் அருகே தோடநேரி என்ற இடத்தில் உடன் இருந்த பெண்மணியைக் கொன்றவர் பின்னர் போலீஸில் சரண் அடைந்தார்.

மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ளது குட்டிமீட்டிப்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி(40). இவருக்கு ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் ஆகி, கணவர்களை விட்டுப் பிரிந்து வந்துவிட்டார்.

இந்நிலையில் மதுரை அவனியாபுரம் அருகே தோடநேரியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (55) என்பவரை திருமணம் செய்துகொண்டார். ராமகிருஷ்ணனும் ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் செய்து, மனைவியை விட்டுப் பிரிந்து வந்துவிட்டாராம்.

இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் சிந்தாமணி அருகே ஐயனார்புரத்தில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் சுப்புலட்சுமியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், நேற்று இரவு அவரைக் கத்தியால் கொன்றுவிட்டு, அவனியாபுரம் போலீஸில் சரண் அடைந்தார் ராமகிருஷ்ணன். இதுகுறித்து அவனியாபுரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.