விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தமிழகத்தில் கொட்டப்படும் கேரள கழிவுகள் : மதிமுக சார்பில் சாலை மறியல்

பொள்ளாச்சி, ஜூன் 19 : கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டும் கேரளாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுக சார்பில் பொள்ளாச்சியை அடுத்து தமிழக எல்ல

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:17 am

பா. இளையபதி

பொள்ளாச்சி, ஜூன் 19 : கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டும் கேரளாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுக சார்பில் பொள்ளாச்சியை அடுத்து தமிழக எல்லைப் பகுதியான கோபாலபுரத்தில் இன்று 250க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதிமுக சார்பில் கோவை புறநகர் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் தலைமையில், இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அரியலூரில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

கேரளாவில் கொல்லப்படும் கோழிகளின் கழிவுகளையும், மருத்துவக் கழிவுகளையும் லாரிகளில் ஏற்றி நள்ளிரவில் எல்லைப் பகுதியில் உள்ள  தமிழக கிராமங்களின் விளை நிலங்களில் கொட்டிவிட்டு சென்று விடுகின்றனர். இந்த அத்துமீறல் 8 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. தற்போது இந்த நிலை அதிகரித்து வருகிறது. இதனை உடனடியாக தடுக்க வேண்டும் என்று மதிமுகவினர் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.