விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பசும்பொன் சென்று திரும்பிய மேலும் 3 பேர் சாவு

பசும்பொன் தேவர் குருபூஜைக்குச் சென்று திரும்பியபோது, கார் மீது சிலர் பெட்ரோல் குண்டு வீசியதில் காயமடைந்த 3 பேர் இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

News image
Updated On :4 நவம்பர் 2012, 6:02 am

மது

பசும்பொன் தேவர் குருபூஜைக்குச் சென்று திரும்பியபோது, கார் மீது சிலர் பெட்ரோல் குண்டு வீசியதில் காயமடைந்த 3 பேர் இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

ஜெயபாண்டி (20), சுந்தரபாண்டி (20), வெற்றிவேல் (19) ஆகிய மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

முன்னதாக, பசும்பொன்னில் அக்டோபர் 30-ம் தேதி முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் மீது பல்வேறு இடங்களில் மர்மக் கும்பல் தாக்குதல் நடத்தியது.  மதுரை விரகனூர் சுற்றுச்சாலை பகுதியில் காரில் வந்தவர்கள் மீது மர்மக்கும்பல் பெட்ரோல் குண்டு வீசியதில் கார் தீப்பற்றி எரிந்தது. இதில் அதிலிருந்த 20 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மதுரையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.