இச் சம்பவங்களின் தொடர்ச்சியாக ஒருவரை ஆபாசமாக பேசி தாக்கியதாக மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அச்சம்தவிழ்த்தான், கீழத்தெருவைச் சேர்ந்த பழனி மகன் ராஜ்குமார் (32). இவர் ராஜபாளையத்தில் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். புதன்கிழமை இரவு வேலை முடிந்து வந்துள்ளார். அப்போது அச்சம்தவிழ்த்தான், அக்ராஹரம் தெருவைச் சேர்ந்த கு.பால்பாண்டி, மு.ஈஸ்வரன், ந.கருப்பையா ஆகியோர் வழிமறித்து, ஆபாசமாகப் பேசி, ராஜ்குமாரை கல்வீசி தாக்கினார்களாம். இதில் இவர் காயம் அடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து மூவரையும் தேடி வருகிறார்கள்.