ஸ்டவ் வெடித்து இளம் பெண் சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஸ்டவ் வெடித்தத்தில் தீக்காயம் அடைந்த இளம் பெண் உயிரிழந்தார்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேட்டுமுள்ளிகுளத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஸ்டவ் வெடித்தத்தில் தீக்காயம் அடைந்த இளம் பெண் உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேட்டுமுள்ளிகுளத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சுப்புலட்சுமி (45). இவர்களது மகள் தேவி (23) யை, காளிராஜ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை வீட்டில் மண்ணெண்ணை ஸ்டவ்வை பற்ற வைக்கும் போது தீப்பற்றியதில் தேவி பலத்த காயம் அடைந்தாராம். இவரை காப்பாற்ற முயன்ற காளிராஜுக்கும் காயம் ஏற்பட்டதாம். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேவி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். மல்லி போலீஸார் சார்பு ஆய்வாளர் கீதா வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...