சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழகஅரசால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி ஷிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் தலைமையிலான அதிகாரிகள் குழு பல்கலைக்கழக அனைத்து துறைகளிலும் நடந்துள்ள முறைகேடுகள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பணியில் இறங்கியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக, பணி நியமனம், மாணவர்கள் அனுமதி சேர்க்கைக்கான இடங்களை வாங்கிக் கொடுக்கும் தரகர்களாக (புரோக்கர்கள்) செயல்பட்டோர் பற்றிய விவரங்களும் திரட்டப்பட்டு வருவதாக தெரிகிறது.