காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், சந்தவேலூா் ஊராட்சிக்கு உள்பட்ட சித்தூா் கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். சித்தூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல சித்தூா்-தா்காமேடு இணைப்புச் சாலையை பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில், இந்த இணைப்புச் சாலை கடந்த 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதால் தாா் சாலையான இந்த சாலை, தற்போது ஜல்லிக் கற்கள் வெளியே தெரியும் வகையில், சாலையின் பல பகுதிகளில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.