இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கொலை முயற்சி வழக்கில் அண்ணாமலைநகர் பேரூராட்சி தலைவரின் கணவர் உள்ளிட்ட 4 பேர் கைது!

சிதம்பரம் அண்ணாமலைநகர் சி.கொத்தங்குடிதோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தையன் (42). அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளராக உள்ள இவருக்கும் அப்பகுதியில் வசிக்கும் அதிமுகவைச் சேர்ந்த அண்ணாமலைநகர்

News image
Updated On :17 ஏப்ரல் 2013, 10:36 am

G.Sundararaj

அதிமுகவைச் சேர்ந்த சிதம்பரம் அண்ணாமலைநகர் பேரூராட்சி தலைவரின் கணவர் உள்ளிட்ட 4 பேரை கொலைமுயற்சி வழக்கின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

சிதம்பரம் அண்ணாமலைநகர் சி.கொத்தங்குடிதோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தையன் (42). அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளராக உள்ள இவருக்கும் அப்பகுதியில் வசிக்கும் அதிமுகவைச் சேர்ந்த அண்ணாமலைநகர் பேரூராட்சி தலைவர் கீதாவின் கணவர் கலியமூர்த்திக்கும் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கலியமூர்த்தி (42), செந்தில் (30), ராம்குமார் (33), தமிழரசன் (28) ஆகிய நால்வரும் செவ்வாய்க்கிழமை இரவு முத்தையன் வீட்டிற்குள் நுழைந்து முத்தையன் வீட்டில் இல்லாததால், அவரது மனைவியை ஆபாசமாக திட்டி, மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து முத்தையன் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து கலியமூர்த்தி உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.