விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் தமிழுக்கு மீண்டும் முக்கியத்துவம்

 தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். சட்டசபையிலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்வு முறைகளில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஏப்ரல் 2013, 3:46 pm

சக்திவேல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கான தேர்வு முறை மற்றும் பாடத்திட்டங்கள் கடந்த மார்ச் 12-ம் தேதி மாற்றம் செய்யப்பட்டன. இதில், தமிழ் மொழிப்பாடத்துக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. இப்புதிய முறையை பலரும் விமர்சித்தனர்.

 தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். சட்டசபையிலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்வு முறைகளில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

  இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீத கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:-

  மாற்றம் செய்யப்பட்ட தேர்வு முறைகள் குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்ததால், இது குறித்து தேர்வாணையம் மறு ஆய்வு செய்து, தேர்வின் தரம் குறையாத விதத்திலும், தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்திலும் தேர்வு முறையை திருத்தி அமைத்துள்ளது.

  குரூப் -1 தேர்வில் மாற்றம் செய்யப்படவில்லை. தற்போதைய நிலையே தொடரும்.

குரூப் -2 தேர்வில் நேர்காணல் பதவிகள் அடங்கிய தேர்வுக்கு முதல் நிலைத் தேர்வு, நேர்காணல் அல்லாத பதவிகள் அடங்கிய தேர்வு, குரூப்-3, குரூப்-3 அ, குரூப் -4 ஆகிய பதவிகளுக்கான தேர்வு முறையில் 10-ம் வகுப்பு தரத்தில் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் இருந்து 100 வினாக்கள் கேட்கப்படும்.

  கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வு முறையில் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 30 வினாக்களுக்குப் பதில் 80 வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவுப் பிரிவில் 75 வினாக்களும், அடிப்படை கிராம நிர்வாகம் 25 வினாக்களும் கேட்கப்படும். திறனறிதேர்வுக்கான 20 வினாக்களில் மாற்றம் செய்யப்படவில்லை.

புதிய முறைப்படி பொது அறிவுப் பிரிவில் 75 வினாக்களும், திறனறிதல் பிரிவில் 25 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100 வினாக்களும் கேட்கப்படும்.

தமிழ், ஆங்கிலத்தில் மாற்றம்: தமிழுக்குரிய பாடத்திட்டம் 10-ம் வகுப்பு தரத்தில் உள்ளது. இப்பாடத்திட்டத்தில் ஏற்கெனவே உள்ள தமிழ் இலக்கணத்துடன், தமிழ் இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்தொண்டும் என மூன்று பகுதிகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஆங்கில பாடத் திட்டமானது, ஆங்கில இலக்கணம், ஆங்கில இலக்கியம்,ஆங்கில அறிஞர்களும் அவர்தம் தொண்டும் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

புதிய பகுதி: சில குறிப்பிட்ட பதவிகளுக்கு மட்டும் ஆங்கிலம் அல்லது தமிழில் வரைவு எழுதுதல் (டிராப்டிங்) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. பகுத்தறிதல், தர்க்கத்திறன், பொது விழிப்புணர்வு ஆகிய பிரிவுகளில் திறன் பெற்றவர்களைத் தேர்ந்தெடுக்கும் விதத்தில் பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

  சிறந்தவர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்கவே இம்மாற்றங்கள் புகுத்தப்பட்டுள்ளன. தரம் குறையாமல், தமிழுக்கான முக்கியத்துவத்தையும் அளித்து  இந்த மாற்றங்களை மேற்கொண்டுள்ளோம். காலிப்பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, திறன்மிகு பணியாளர்களைத் தேர்வு செய்ய இம்மாற்றங்கள் உதவும் என்றார் நவநீதகிருஷ்ணன்.

புதிய தேர்வு முறை மற்றும் பாடத் திட்டங்களை http:www.tnpsc.gov.innewsyllabus.html என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.