இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

வீராணம்ஏரி தூர்வார ஒதுக்கப்பட்ட நிதி மிக குறைவானது: பாரதிய ஜனதா

சென்னைக்கு குடிநீர் வழங்கும் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியை தூர்வார தமிழக முதல்வர் ஒதுக்கியுள்ள ரூ.40 கோடி நிதி மிகக் குறைவானதாகும். இருந்தாலும் ஒதுக்கப்பட்ட நிதியை சரியான முறையில்

News image
Updated On :19 ஏப்ரல் 2013, 10:40 am

G.Sundararaj

சென்னைக்கு குடிநீர் வழங்கும் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியை தூர்வார தமிழக முதல்வர் ஒதுக்கியுள்ள ரூ.40 கோடி நிதி மிகக் குறைவானதாகும். இருந்தாலும் ஒதுக்கப்பட்ட நிதியை சரியான முறையில் செலவீனம் செய்தால் ஏரியின் கொள்ளளவை ஒரளவு உயர்த்த முடியும் என பாரதிய ஜனதா கட்சி தேசிய பொதுக்குழு உறுப்பினர், காவிரி டெல்டா விவசாயிகள் விளைபொருள் பாதுகாப்பு சங்க துணைத் தலைவர் கே.வி.கண்ணன்பிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியை தூர்வார ரூ.40 கோடியும், கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் வெள்ளாற்றின் குறுக்கே உள்ள சேத்தியாத்தோப்பு அணைக்கட்டை புனரமைக்க ரூ.19.70 கோடியும், பெலாந்துரை அணைக்கட்டை புனரமைக்க ரூ.17.50 கோடியும் நிதிஒதுக்கிய தமிழக முதல்வருக்கு விவசாயிகள் சார்பில் நன்றியும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வீராணம் ஏரியின் பரப்பளவை அதிகப்படுத்த தற்போது அங்குள்ள வண்டல் மண்ணை கருத்தில் கொண்டு ஒதுக்கப்பட்ட நிதி. இந்த நிதி மிக, மிக குறைவாகும். இருந்தாலும் ஒதுக்கப்பட்ட நிதியை சரியான முறையில் செலவீனம் செய்தால் வீராணம்ஏரியின் கொள்ளவை ஒரளவு உயர்த்த முடியும். வீராணம்ஏரியின் முழுக் கொள்ளளவு 47.5 அடியாகும். ஏரியில் 45 அடி நீர் நிரம்பினாலே மேல்கரையில் உள்ள 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 600-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கி பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே இந்த நிலத்தில் ஏரியில் உள்ள மண்ணை கொண்டு மேல்கரையை உயர்த்த திட்டமிடப்பட்டு, இதுநாள் வரையில் செயல்படுத்தப்படவில்லை. எனவே தற்போது ஒதுக்கப்பட்ட ரூ.40 கோடி நிதியை கொண்டு வீராணம்ஏரியின் மேல்கரையில் விளை நிலங்களை உயர்த்திடவும், மேல்கரையை பலப்படுத்தவும், ஏரியின் மேல்புறத்தை ஆழப்படுத்தினால் ஏரியின் நீர் மட்டம் ஒரளவு உயரும். இதனால் ஏரியின் மேல்பகுதி விளைநிலங்கள் பாதிக்கப்படாது. ஏரியின் மேல்பகுதியை ஆழப்படுத்தும் போது ஏரியின் கொள்ளளவு உயரும் என கே.வி.கண்ணன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.