கல்வி பயிலும் மாணவர்கள் தரமான கல்வி பெற வேண்டும், இணையத்தளம் மூலம் உலகளவிலான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் பரிசாகவும், தாய் வீட்டுசாதனமாகவும் மடிக்கணினியை மாணவர்களுக்கு வழங்கியுள்ளார். இந்த திட்டம் புதுச்சேரி, பீகார், கர்நாடகம் உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டமாகும். முதல்வர் ஜெயலலிதாவின் திட்டத்தை பின்பற்றி உபி முதல்வர் அகிலேஷ் யாதவ் மடிக்கணினி திட்டத்தை அறிவித்துள்ளார். 2011-12 ஆண்டு ஆயிரம் கோடி நிதிஒதுக்கி 9 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. 22-13-ம் ஆண்டு ரூ.1500 கோடி நிதிஒதுக்கி 7 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. 2013-14 ஆண்டிற்கு ரூ.1500 கோடி நித ஒதுக்கி 5 லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு மடிக்கணினி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 27,389 மாணவர்களுக்கும், நடப்பு ஆண்டில் 26,349 மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உதவிபெறும் பள்ளிகள் 117, பொறியியல் கல்லூரி-1, தொழில்நுட்பக்கல்லூரி-2, கலை மற்றும் அறிவியல் கல்லூரி 4 ஆகியவற்றின் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழத்தை தமிழகஅரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதால் இந்த கல்லூரி மேன்மேலும் வளர்ச்சியடையும். பல்கலைக்கழகத்தில் அனைத்து குறைபாடுகளும் நீக்கப்பட்டு தலைசிறந்த பல்கலைக்கழகமாக திகழும் என அமைச்சர் தெரிவித்தார்.