சிதம்பரம் அருகே சோழத்தரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதில் படுகாயமுற்று அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சங்கர் (32), சத்தியமூர்த்தி (32) ஆகிய இருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சங்கருக்கு மண்ணீரல் அகற்றப்பட்டது. தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனைக்கு சென்று நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்து, சிகிச்சை விபரம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். எம்எல்ஏவுடன் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சி கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன், அரசு ஊழியர் ஐக்கியப் பேரவை மாநில துணைச் செயலாளர் ரா.காவியச்செல்வன், மாவட்ட துணைச் செயலாளர் குறிஞ்சிவளவன், நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு உள்ளிட்டோர் உடன் சென்றனர்.