ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் தெப்ப உற்சவம்!
காட்டுமன்னார்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கடந்த ஏப்.17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவத்தை முன்னிட்டு ஏப்.25-ம் தேதி தேர் திருவிழா


காட்டுமன்னார்கோயில் ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தெப்ப உற்சவம் வெகுசிறப்பாக நடைபெற்றது.
காட்டுமன்னார்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கடந்த ஏப்.17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவத்தை முன்னிட்டு ஏப்.25-ம் தேதி தேர் திருவிழா நடைபெற்றது. ஏப்.28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேதபுஷ்கரணி குளத்தில் இரவு 10 மணிக்கு தெப்ப உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ருக்குமணி, சத்யபாமா சமேத ஸ்ரீராஜகோபாலசுவாமி, நாதமுனிகள் ஆகியோர் தெப்பத்தில் எழுந்தருளினர். திருக்குளத்தில் சுவாமிகள் தெப்பத்தில் மூன்று சுற்று, சுற்றி வலம் வந்தனர். பின்னர் இன்று காலை கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
தெப்ப உற்சவத்தில் கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஏ.அருண்மொழிதேவன், நாக,முருகுமாறன் எம்எல்ஏ, ஒன்றியச் செயலாளர் பாலதுரைபாண்டியன், காட்டுமன்னார்கோயில் ஒன்றியக்குழுத் தலைவர் எம்.கே.மணிகண்டன்,பேரூராட்சி தலைவர் எம்ஜிஆர்.தாசன், குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.பாண்டியன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல்அலுவலர் ப.வெங்கடகிருஷ்ணன், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் எஸ்.என்.தோத்தாத்திரி உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...