இந்நிலையில் சிதம்பரம் வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பிற துறைகளைச் சேர்ந்த பலருக்கு பிப்ரவரி மாதம் இதுநாள் வரை வழங்கப்படாமல் கருவூல அதிகாரிகளாலும், வங்கி அதிகாரிகளாலும் அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். மேற்கண்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பளம் குறித்து கருவூல அதிகாரிகளை சந்தித்து கேட்ட போது, வங்கியில் சென்று விசாரித்து பெற்றுக் கொள்ளுங்கள் என கூறுகின்றனர். வங்கிக்கு சென்றால் கருவூலதுறையில் இருந்து முழுவிபரம் பெற்று வாருங்கள் செக் போட்டு தருகிறோம் என அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற பிறதுறைகளைச் சேர்ந்த பலரும் பிப்ரவரி மாதம் சம்பளம் வழங்கப்படாமல் அலைகழிக்கப்பட்டுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் சம்பளத்தை நம்பி வாழும் அரசு ஊழியர்களுக்கு அலைகழிக்கப்படாமல் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.