கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தில்லியில் போராட்டம்: மம்தா முடிவு

மேற்கு வங்க அரசு, ரூ. 2 லட்சம் கோடி கடன் சுமையால் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், கடனுக்கான வட்டித் தொகையை செலுத்த 3 ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும் என்று மம்தா கோரிக்கை விடுத்து வருகிறார். அது தொடர்பாக மத்திய அரசு எந்தவிதமான பதிலையும் தரவில்லை

News image
Updated On :5 ஜனவரி 2013, 1:12 pm

தினமணி

கடனுக்கான வட்டியை செலுத்த கால அவகாசத்தை அளிக்காவிட்டால், மத்திய அரசுக்கு எதிராக தில்லியில் போராட்டம் நடத்துவோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க அரசு, ரூ. 2 லட்சம் கோடி கடன் சுமையால் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், கடனுக்கான வட்டித் தொகையை செலுத்த 3 ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும் என்று மம்தா கோரிக்கை விடுத்து வருகிறார். அது தொடர்பாக மத்திய அரசு எந்தவிதமான பதிலையும் தரவில்லை. சமீபத்தில் நடைபெற்ற இந்திய தேசிய மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் பேசிய மம்தா, ""மேற்கு வங்கத்துக்கு உதவுங்கள். மேற்கு வங்கம் முன்னேறினால், நாடு முன்னேறும்'' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜங்கல்மஹால் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவதாவது ""நாங்கள் பொறுமையாக காத்திருக்கிறோம். எங்களது கோரிக்கைகளான, கடனுக்கான வட்டியை செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம், கடனை திருப்பிச் செலுத்தும் திட்டத்தில் மறுசீரமைப்பு ஆகியவை தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தில்லியில் போராட்டம் நடத்துவோம்.முந்தைய மார்க்சிஸ்ட் அரசுக்கு, கடன் வாங்குவதில் எந்தவிதமான கட்டுப்பாடும் விதிக்காத மத்திய அரசு, இப்போது எங்களுக்கு சலுகை அளிக்க மறுக்கிறது. இதை மேற்கு வங்க மக்கள் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.