விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

துபாயில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் வந்தவரைப் பிடித்து விசாரணை

மதுரை விமான நிலையத்துக்கு இன்று காலை போலி பாஸ்போர்ட் மூலம் வந்திறங்கிய நபர் ஒருவரைப் பிடித்து குடியுரிமைத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 

News image
Updated On :8 ஜனவரி 2013, 6:15 am

மது

மதுரை விமான நிலையத்துக்கு இன்று காலை போலி பாஸ்போர்ட் மூலம் வந்திறங்கிய நபர் ஒருவரைப் பிடித்து குடியுரிமைத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 

ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அப்துல் ரகிம் என்பவரின் மகன் கலிமுதீன்(49). இவர் துபாயில் சமையல் கலைஞராகப் பணிபுரிகிறாராம்.

இன்று காலை 176 பேருடம் மதுரை வந்த விமானத்தில் இவர் வந்திறங்கினார். இவரிடம் குடியுமைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், இவர் பெயர் மாற்றி பஷிரித் (த/பெ: முகமது ரஹீம்) என்ற பெயரில் வந்திருந்தது தெரியவந்தது. அவருடைய பாஸ்போர்ட் போலி என்று கண்டறிந்த குடியுரிமைத் துறை அதிகாரிகள், இவரிடம் விசாரணை மேற்கொண்டு பின்னர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.