மேலும் அவர் பேசுகையில் கடந்த மே மாதம் மகாபலிபுரத்தில் நடந்த வன்னியர் மாநாட்டில் 25 லட்சம் பேர் கலந்துக் கொண்டதை கண்டு காழ்ப்புணர்ச்சியிலேயே அ.தி.மு.க இவ்வாறு செயல்படுகிறது என்றும், வன்னியர் என்றாலே அவர்களை கைது செய்த அ.தி.மு.க-விற்கு பாடம் புகட்டும் விதமாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வன்னியர்களும் கட்சி பார்த்து வாக்களிக்காமல் சாதி பார்த்து வாக்களிக்க வேண்டும் என்றார்.2016ஆம் ஆண்டு பா.ம.க தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்ற நிலையில் ஆட்சிக்கு வந்ததும் பூரண மதுவிலக்கு முதலாவதாக அமல்படுத்தப்படும் என்றும், அ.தி.மு.க, தி.மு.க ஆட்சியை போல இலவசங்களுக்கு முக்கியத்துவம் தராமல் கல்வி, சுகாதாரம், விவசாயத்திற்கு மட்டும் இலவசம் வழங்கப்படும் என்றார்.