ஏழை, பணக்காரர்கள் என்று வேறுபாடின்றி ரமலான் மாதத்தில் நோன்பிருந்து அடுத்தவர்களின் பசியை அறிந்து உதவி செய்து வரும் சிறுபான்மை மக்கள் செயல்பாடு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நாம் மதத்தால் வேறுபட்டு இருந்தாலும் வரலாறு மற்றும் பண்பாட்டினால் என்றுமே நாம் ஒன்றுப்பட்டு இருக்கிறோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தியின் மற்றும் பிரதமர் மன்மோகன்சிங் சிறுபான்மை மக்களின் மீது தனி கவனம் செலுத்தி 2004 ஆம் ஆண்டிலிருந்து பல திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. கடந்த 2012-13 ஆம் ஆண்டும் மட்டும் சிறுபான்மை நலனுக்காக 1593 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நடப்பாண்டு 2013-14 ல் ரூ.3511 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மெüலானா அபுல்கலாம்ஆசாத் கல்வி வளர்ச்சி நிதியின் மூலம் 160 கோடி ரூபாய் ஒதுக்கப்ப்டடுள்ளது. இதன் மூலம் சிறுபான்மை மக்களுக்கு அரணாகவும், தேவைப்படின் அவர்களை காக்கும் வாளாகவும் காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது. ஆகவே காங்கிரஸ் கட்சிக்கு தங்களின் முழுமையான ஆதரவை வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அவர் பேசினார்.