அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றிலேயே முதல் முறையாக மருத்துவம், பொறியியல் மற்றும் வேளாண் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு நேர்மையான முறையில் தமிழகத்தில் 7 முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டுள்ளது.இந்த தேர்வினை முறையாகவும், பாதுகாப்பாகவும், மருத்துவர்களுடன் ஆம்புலன்ஸ் வசதி மற்றும் போக்குவரத்து வசதி ஆகிய வசதிகளை ஏற்படுத்தி கொடுத்த பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவிற்கு பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டு நடவடிக்கை குழு நன்றியையும், பாராட்டினையும் தெரிவிக்கிறது. மேலும் இனிமேல் மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில்தான் அனுமதி சேர்க்கை கிடைக்கும் என்ற உத்திரவாதம் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா எடுத்து வரும் நடவடிக்கை மூலம் நிருபனமாகி உள்ளது என அறிக்கையில் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.