பொறியியல், வேளாண் மற்றும் மருத்துவப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வு எழுத மொத்தம் 24,587 மாணவ, மாணவியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் வெள்ளிக்கிழமை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு காலையும், மாலையும் தமிழகம் முழுவதும் அண்ணாமலைநகர், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய 7 மையங்களில் நடைபெற்றது. இதில் சுமார் 13500 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தேர்வு எழுதியுள்ளனர். விண்ணப்பித்தவர்களில் 95 சதவீதம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். அண்ணாமலைநகர் மையத்தில் மட்டும் 3,435 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.