அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிதம்பரம் அருகே தீவிபத்தில் 4 வீடுகள் எரிந்து ரூ.2 லட்சம் சேதம்!

சிதம்பரம் அருகே உள்ள துணிஞ்சிரமேடு கிராமத்தில் நேற்று(சனிக்கிழமை) இரவு அமுதா என்பவரது வீட்டில் மின்கசிவினால் தீப்பற்றியது. இதில் கேஸ் சிலிண்டர் வெடித்து அருகாமையிலும் பரவி அவரது சகோதரர்களான மோகன், ரகு, பரசுராமன் ஆகியோரது வீடுகளுக்கு தீப்பரவி எரிந்து சேதமுற்றது. மேலும்

News image
Updated On :9 ஜூன் 2013, 11:53 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டு 4 குடிசை வீடுகள் எரிந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமுற்றன.

சிதம்பரம் அருகே உள்ள துணிஞ்சிரமேடு கிராமத்தில் நேற்று(சனிக்கிழமை) இரவு அமுதா என்பவரது வீட்டில் மின்கசிவினால் தீப்பற்றியது. இதில் கேஸ் சிலிண்டர் வெடித்து அருகாமையிலும் பரவி அவரது சகோதரர்களான மோகன், ரகு, பரசுராமன் ஆகியோரது வீடுகளுக்கு தீப்பரவி எரிந்து சேதமுற்றது. மேலும் அருகாமையில் சேகர் என்பவரது ஆட்டு கொட்டகையில் இருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கம் எரிந்து சேதமுற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். தீவிபத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள எரிந்து சேதமுற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.