குறிஞ்சிப்பாடி தாலுக்கா வழுதலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜாராமனுக்கும், பரங்கிப்பேட்டை அருகே உள்ள கரிகுப்பம் ரவிச்சந்திரன் மகள் மஞ்சுளா (18) என்பவருக்கும் கடந்த ஜூன் 3-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கரிக்குப்பத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு விருந்திற்கு வந்த ரவிச்சந்திரன், தனது மனைவி மஞ்சுளாவுடன் மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நேற்று(சனிக்கிழமை) மாலை வந்துள்ளார். கோயிலுக்கு சென்று திரும்பி போது மனைவியை கோயில் வாயிலில் நிற்குமாறு கூறி மோட்டார் சைக்கிளை எடுத்து வரச் சென்றார். மோட்டார் சைக்கிளை எடுத்து வந்து பார்த்த போது மனைவி மஞ்சுளாவை காணாதது கண்டு அதிர்ச்சியுற்றார்.