இந்நிலையில் மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவை உறுப்பினர்கள் செ.கு.தமிழரசன், கே.பாலகிருஷ்ணன் ஆகியோரது கோரிக்கையை ஏற்று மூன்றே நாட்களில் சுவாமி சகாஜனந்தாவிற்கு மணி மண்டபம் கட்டுவதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் அறிவித்தார். அதுபோன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகம் புரோக்கர்கள் கையிலும், ஊழலிலும் சிக்கியது. ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியவில்லை. பணி பாதுகாப்பு இல்லை. இந்நிலையில் தமிழக முதல்வர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் நலன் கருதி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதனை சீரமைத்து வருகிறார். கருவறை முதல் கல்லறை வரை மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட பணிகளை தமிழக முதல்வர் அறிவித்து நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார் என அவர் தெரிவித்தார்.