விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திமுகவின் தூண்களாக இருப்பவர்கள் இளைஞர்கள்தான்: மு.க.ஸ்டாலின்

திமுகவில் இளைஞர் அணி எப்போதும் துடிப்பாக செயல்பட்டு வருகிறது. திமுகவுக்கு சோதனை வந்தபோதெல்லாம் இளைஞர் அணி கேடயமாக, பக்கபலமாக நின்று செயல்பட்டிருக்கிறது. மிசா காலத்தில் திமுகவின் உறுதிமிக்க தொண்டர்களுடன் இணைந்து ஆயிரக்கணக்கான இளைஞர் அணியினரும் போராடினார்கள்.மற்ற மாவட்டங்களில்

News image
Updated On :17 மார்ச் 2013, 12:56 pm

dinamani

திமுகவின் தூண்களாக இப்போதும், எதிர்காலத்திலும் இருப்பவர்கள் இளைஞர்கள் தான்  என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவிலில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி பயிற்சி பாசறை கூட்டத்தை தொடங்கிவைத்து அவர் பேசியதாவது:

திமுகவில் இளைஞர் அணி எப்போதும் துடிப்பாக செயல்பட்டு வருகிறது. திமுகவுக்கு சோதனை வந்தபோதெல்லாம் இளைஞர் அணி கேடயமாக, பக்கபலமாக நின்று செயல்பட்டிருக்கிறது. மிசா காலத்தில் திமுகவின் உறுதிமிக்க தொண்டர்களுடன் இணைந்து ஆயிரக்கணக்கான இளைஞர் அணியினரும் போராடினார்கள்.மற்ற மாவட்டங்களில் நடந்த இளைஞர் அணி பாசறையைவிட ஈரோட்டில் நடக்கும் இந்த பயிற்சி பாசறை சிறப்பானதாகும். ஏனெனில் இது திமுகவின் குருகுலத்தில் நடக்கும் முகாம் இது. திமுகவை உருவாக்க அண்ணா, கருணாநிதி மற்றும் தலைவர்கள் ஈரோட்டில் இருந்து எந்த அளவுக்கு களப்பயிற்சி பெற்றனர். பெரியாரிடம் எத்தனை மரியாதை வைத்திருந்தனர் என்பதை இன்றைய இளைஞர்கள் முழுமையாக தெரிந்துவைத்திருக்க வேண்டும்.திமுக வில் இளைஞர்கள் அணி மிகவும் முக்கியமானதாகும். சரியான பயிற்சி அளித்தால் வருங்காலம் தி.மு.க.வுக்கு பிரகாசமாக அமையும்.

திமுகவை கட்டி காக்கும் முக்கிய தூண்கள் இந்த இளைஞர்கள் தான். இளைஞர் அணியினர் எக்காரணத்தை கொண்டும் கட்டுப்பாட்டை மீறக்கூடாது. கண்ணிய உணர்வுடன் கடமையாற்ற வேண்டும் என்று கூறினார்.

இப்பயிற்சி முகாமில் சுப.வீரபாண்டியன், கோவி.செழியன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். முகாம் தொடக்க விழாவில் திமுக மாவட்ட செயலர் என்கேகே.பி.ராஜா, முன்னாள் அமைச்சர்கள் என்கேகே.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், சு.முத்துசாமி, ஈரோடு மாநகர திமுக செயலர் குமார் முருகேஸ், காஞ்சிக்கோவில் பேரூர் கழக திமுக செயலர் காஞ்சி குமார், ஈரோடு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ், மாநகர திமுக இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை பா.ராமு உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.