கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரம் ஸ்ரீநடராஜர்கோயில் நந்திக்கு வெள்ளிச் சங்கிலி காணிக்கை!

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் உள்ள நந்திக்கு வெள்ளியிலான சங்கிலியை பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

News image
Updated On :26 மார்ச் 2013, 3:05 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் உள்ள நந்திக்கு வெள்ளியிலான சங்கிலியை பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் சித்சபையில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடாரஜமூர்த்திக்கு எதிரே உள்ள நந்திக்கு பிரதோஷ நாளான ஞாயிற்றுக்கிழமை வெள்ளியிலான மணியுடன் கூடிய சங்கிலியை மதுரையைச் சேர்ந்த பரத்வாஜ் என்ற பக்தர் காணிக்கையாக வழங்கியுள்ளார். 21 மணியுடன் சேர்ந்த இந்த வெள்ளி சங்கிலி சுமார் 220 கிராம் கொண்டது. இதன் மதிப்பு சுமார் 15 ஆயிரம் ரூபாய் ஆகும். ஞாயிற்றுக்கிழமை பிரதோஷத்தின் போது நந்திக்கு பக்தர் காணிக்கையாக அளித்த வெள்ளி சங்கிலி அணிவிக்கப்பட்டு கேதாரதீட்சிதரால் சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.