அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கார் மோதி, சிதம்பரத்தில் நடைபயற்சி சென்ற பெண் சாவு: மற்றொரு பெண் காயம்

சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சீனுவாசன் மனைவி அம்பிகா (50). இவரும் அதே தெருவைச் சேர்ந்த கலைவாணி (35) ஆகிய இருவரும் தினமும் புறவழிச்சாலையில் நடைபயற்சி செல்வது வழக்கம். இன்று

News image
Updated On :3 மே 2013, 12:41 pm

G.Sundararaj

சிதம்பரம் புறவழிச்சாலையில் சாலையோரம் நடைபயிற்சி சென்ற பெண்கள் மீது கார் மோதியது. இவ்விபத்தில் ஒரு பெண்மணி இறந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.

சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சீனுவாசன் மனைவி அம்பிகா (50). இவரும் அதே தெருவைச் சேர்ந்த கலைவாணி (35) ஆகிய இருவரும் தினமும் புறவழிச்சாலையில் நடைபயற்சி செல்வது வழக்கம். இன்று அதிகாலை புறவழிச்சாலையில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது புதுச்சேரியிலிருந்து திருத்துறைபூண்டி நோக்கி சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அப்பெண்கள் மீது மோதியது. இவ்விபத்தில் அம்பிகா படுகாயமுற்று இறந்தார். மற்றொருவரான கலைவாணி காயமுற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சிதம்பரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து காரை ஓட்டி வந்த உரிமையாளர் புதுச்சேரியைச் சேர்ந்த பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.