அண்மையில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை கூறி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்தியஅரசு தவிர்த்தது, உச்சநீதிமன்றம் இப்போதைய தீர்ப்பில் மேலாண்மை வாரியம் அமைக்க காலக்கெடு எதையும் மத்தியஅரசுக்கு விதிக்கவில்லை. மொத்தத்தில் எந்த தீர்ப்பு கிடைத்தாலும் தமிழகத்திற்கு காவிரி நீர் இல்லை என்ற நிலைப்பாட்டில் மத்தியஅரசு உறுதியாக உள்ளது. உச்சநீதிமன்றமும், கர்நாடகத்தின் கோரிக்கையை நடைமுறைப்படுத்தும் மன்றமாக உள்ளது. ஆகவே தமிழகஅரசு அனைத்து கட்சிகள் மற்றும் உழவர் அமைப்புகளின் கூட்டத்தை கூட்டு மத்தியஅரசுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு கோருகிறோம் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.