கரூர் அருகே ஜேசிபி இயந்திரத்தை திருடிய இளைஞரை போலீஸார் திங்கள் கிழமை கைது செய்தனர்.
கரூர் அருகே கவுண்டம்பாளையம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(45). இவர் சொந்தமாக ஜேசிபி இயந்திரம் வைத்துள்ளார். கடந்த 29ம்தேதி வீட்டின் முன் இயந்திரத்தை நிறுத்திவிட்டு காலையில் வந்து பார்த்த போது அவற்றை யாரோ திருடிச் சென்று விட்டனர். இந்நிலையில் ஜேசிபி இயந்திரம் பஞ்சப்பட்டி அருகே உள்ள கள்ளமுத்தாம்பட்டியில் புதருக்கிடையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பசுபதிபாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று ஜேசிபி இயந்திரத்தை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் பாலசுப்பிரமணியன்(22) என்பவர்தான் ஜேசிபி இயந்திரத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து பாலசுப்பிரமணியத்தை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

