புலிகள் காப்பக எல்லையில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் ரூ. 5 லட்சம் மதிப்பில் பாதுகாப்பு தடுப்பு வளையம் அமைத்தல், சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக அருவியில் உள்ள பாறையை உடைத்து மேம்படுத்தும் பணி வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில் அருவியில் பாறைக்கு வெடி வைத்து உடைத்ததாகவும், அணையில் இருந்து மணல் எடு்த்ததாகவும் புகார் கூறப்பட்டது. புலிகள் காப்பக எல்லையில் வெடி வைத்து பாறையை உடைத்து சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆட்சியர், வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.