கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அரசு மருத்துவர் வீட்டில் திருட்டு

பாளையங்கோட்டை பெருமாள்புரம் 22 வது தெருவில் வசிப்பவர் ஸ்ரீஷைனிங்க். இவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணி செய்து வருகிறார். வீட்டை பூட்டி விட்டு ஸ்ரீஷைனிங்க்,

News image
Updated On :15 அக்டோபர் 2013, 9:40 am

ஷேக் அப்துல்காதர்

பாளையங்கோட்டையில் பூட்டியிருந்த அரசு மருத்துவர் வீட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச் சென்றனர்.

பாளையங்கோட்டை பெருமாள்புரம் 22 வது தெருவில் வசிப்பவர் ஸ்ரீஷைனிங்க். இவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணி செய்து வருகிறார். வீட்டை பூட்டி விட்டு ஸ்ரீஷைனிங்க், குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தாராம். செவ்வாய்க்கிழமை வீட்டின் முன்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

தகவலறிந்த போலீஸார் சம்பவ நடந்த வீட்டிற்கு சென்று பார்வையிட்டனர். வீட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றிருந்தனர். ஸ்ரீஷைனிங்க் குடும்பத்தினர் இல்லாததால் நகை, பணத்தின் மதிப்பு தெரியவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.