இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பழைய ரூபாயை தந்தவரை காயப்படுத்திய வேன் கிளினீர் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த தாண்ப்பூண்டி அருகே போரூர் புதுநகரை சேர்ந்தவர் கோபால் மகன் லட்சுமணன்(45). புதனன்று இவர் கவரப்பேட்டைக்கு சென்று அங்கிருந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் வேனில் வீடு

News image
Updated On :18 செப்டம்பர் 2013, 10:24 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த தாணிப்பூண்டி அருகே உள்ள போரூர் புது நகரை சேர்ந்த லட்சுமணன் என்பவரை தாக்கிய சம்பவத்தில் புதன்கிழமை வேன் கிளீனர் வேலு பாதிரிவேடு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த தாண்ப்பூண்டி அருகே போரூர் புதுநகரை சேர்ந்தவர் கோபால் மகன் லட்சுமணன்(45). புதனன்று இவர் கவரப்பேட்டைக்கு சென்று அங்கிருந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் வேனில் வீடு திரும்பினார்.அப்போது அந்த வேனில் கிளீனராக இருந்த அமரம்பேடு பகுதியை சேர்ந்த செல்லதுரை மகன் வேலு(30) என்பவரிடம் லட்சுமணன் 10 ரூபாயை தந்து உள்ளார். அது பழைய ரூபாய் நோட்டாக இருப்பதாகவும், செல்லாது என வேலு கூறவே அந்த ரூபாய் நோட்டு நன்றாகத் தான் இருக்கிறது வரும்போது இதே போன்று வேனில் கொடுத்தது தான் என லட்சுமணன் கூறவும் இப்படியே வாக்குவாதம் தொடர்ந்த நிலையில் கிளீனர் வேலு ஆத்திரப்பட்டு லட்சுமணனை வேனில் தள்ளினார்.

இதில் தலையில் காயமடைந்த லட்சுமணன் இது குறித்து பாதிரிவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வேலுவை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். தொடர்ந்து லட்சுமணன் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.