இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :5 டிசம்பர் 2014, 1:03 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்த சேர்வராயனின் 16 வயது மகள், சீலநாயக்கன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது எதிர் வீட்டில் குடியிருந்து வருபவர் சண்முகவேல் மகன் மருதுபாண்டி (28). இவர் மாணவியை கிண்டல், கேலி செய்து வந்தாராம். 21.9.14-ம் தேதி இரவு வீட்டின் முன் நின்று கொண்டிருந்த மாணவியை மருதுபாண்டி,  திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி, கையைப் பிடித்து இழுத்துள்ளார். இதனையடுத்து மாணவி சத்தமிடவே, வீட்டார் வெளியே வந்து மருதுபாண்டியை சத்தம் போட்டுள்ளார்கள். மேலும் இது தொடர்பாக பஞ்சாயத்து பேசி முடித்துள்ளார்கள்.

டிசம்பர் 2-ம் தேதி (செவ்வாய்கிழமை) மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது சின்னராஜ் என்பவரின் சோளக்காட்டில் மறைந்திருந்த மருதுபாண்டி, மாணவியை கையைப் பிடித்து இழுத்து உன்னை திருமணம் செய்யாமல் விடமாட்டேன் என்று கூறியுள்ளார். தப்பி ஓடிவந்த மாணவி இது குறித்து வீட்டில் கூறியுள்ளார். பின்னர் இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து மருதுபாண்டியை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.