ஸ்ரீவில்லிபுத்தூர் : மனைவி மீதான சந்தேகத்தால் மண்வெட்டியால் வெட்டிய கணவர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவரை, மண்வெட்டியால் வெட்டி காயப்படுத்திய கணவரை போலீஸார் கைது செய்தனர்.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவரை, மண்வெட்டியால் வெட்டி காயப்படுத்திய கணவரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை-மாலைபட்டியைச் சேர்ந்தவர் வைரமுத்து (45). இவரது மனைவி சங்கரம்மாள் (35). இருவரும் பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு இரு குழந்தைகள் உண்டு. மனைவியின் நடத்தையில் வைரமுத்து சந்தேகம் கொண்டுள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.
வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட பிரச்னையில் மனைவி சங்கரம்மாளை வைரமுத்து மண்வெட்டியால் தலையில் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமுற்ற அவர், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வைரமுத்துவை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...