45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மதுரையில் இருந்து தனியாக ரயிலில் வந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் மயிலாடுதுறையில் மீட்பு

மதுரையில் இருந்து ரயிலில் வீட்டை விட்டு ஓடி தப்பி வந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் மயிலாடுதுறையில் ரயில்வே போலீஸார் மீட்கப்பட்டனர்.

News image
Updated On :18 மார்ச் 2014, 6:51 am

அன்புமணி ராமதாஸ்

மதுரையில் இருந்து ரயிலில் வீட்டை விட்டு ஓடி தப்பி வந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் மயிலாடுதுறையில் ரயில்வே போலீஸார் மீட்கப்பட்டனர்.

மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் சோதனை செய்த போது,  மூவரையும் போலீஸார் பிடித்து வைத்தனர்.

மதுரை அண்ணா நகர், எஸ்.எம்.காலனியைச் சேர்ந்த சோலை என்பவர் மகன் குருபிரசாத் (13). இவர் சேதுபதி அரசுப் பள்ளியில் படிக்கிறார்.

மதுரை அண்ணாநகர் ஜீவா தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் என்பவர் மகன் முத்துக்குமார் (12). இவர், மங்கையர்க்கரசி மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகிறார்.

அதே பள்ளியில் படிக்கும் எஸ்.எம்.காலனியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் மகன் சேவாக் (11) இம்மூவரும் ராமேஸ்வரம் திருப்பதி ரயிலில் பயணித்துள்ளனர். அவர்கள் மூவர் மீதும் சந்தேகம் எழுந்ததால், மயிலாடுதுறையில் ரயில்வே போலீஸார் சோதனை மேற்கொண்டு, மூவரிடமும் விசாரித்தனர். அப்போது முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அவர்கள் அளித்ததால், மூவரையும் ரயிலில் இருந்து இறக்கி, அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தனர். இவர்கள் மூவரும் காணவில்லை என்று திடீர் நகர் போலீஸில் புகார் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இவர்களின் பெற்றோர்கள் மயிலாடுதுறை வருகின்றனர். பின்னரே எந்த காரணத்துக்காக மூவரும் வீட்டை விட்டு வெளியில்வந்தனர் என்பது தெரியும்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.