இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் மான் வேட்டையாடிய மூவர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மான் வேட்டையாடியதாக மூவரை வனத்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :21 நவம்பர் 2014, 6:36 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மான் வேட்டையாடியதாக மூவரை வனத்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் இடையேயுள்ள எம்.பி.கே.புதுப்பட்டியில் காப்புக் காட்டை ஒட்டியுள்ள தனியார் தோப்பில் மான் வேட்டையாடப்பட்டுள்ளதாக, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட வன காப்பாளர் அசோக்குமாருக்கு ரகசிய தகவல் வந்தது.

அவரது உத்தரவின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச் சரகர் பாண்டியராஜ் தலைமையில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அங்கு சுமார் 5 வயதுள்ள ஆண் மான் வேட்டையாடப்பட்டு, கறியை பிரித்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. வேட்டையில் ஈடுபட்ட துரைச்சாமியாபுரத்தைச் சேர்ந்த பால்ச்சாமி (52), எம்.பி.கே.புதுப்பட்டியைச் சேர்ந்த முத்துச்சாமி (45), இடையன்குளத்தைச் சேர்ந்த மௌனகுரு (27) ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்த மான் தலை மற்றும் வேட்டையாடப் பயன்படுத்தி ஆயுதங்களையும் வனத்துறையினர் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட இவர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் முன்னிலைப்படுத்தப்பட்டனர். நீதிபதி கவிதா, மூவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.