இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ரூ.50 லட்சம் வங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 லட்சம் மோசடி: இருவர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.50 லட்சம் வங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.8 லட்சம் மோசடி செய்த திருச்சியைச் சேர்ந்த கணவன்-மனைவி மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்

News image
Updated On :24 நவம்பர் 2014, 12:54 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.50 லட்சம் வங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.8 லட்சம் மோசடி செய்த திருச்சியைச் சேர்ந்த கணவன்-மனைவி மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், நேதாஜி சாலையில் கௌதம் ஏஜென்சி நடத்தி வருபவர் சுரேஷ் (46). இவரை திருச்சி, ஸ்ரீரங்கம், சுதர்ஸன் நகரைச் சேர்ந்த சங்கரலிங்கம் மற்றும் அவரது மனைவி ஜோதி ஆகியோர் அணுகி, வங்கிக் கடன் ரூ.50 லட்சம் பெற்றுத் தருவதாக் கூறியுள்ளனர்.இதற்காக திருச்சி டவுன், மார்க்கெட் இந்தியன் வங்கிக் கிளையில் உள்ள சங்கரலிங்கம் மற்றும் ஜோதி ஆகியோரின் வங்கிக் கணக்குகளுக்கு 15.11.11 முதல் 19.4.12-ம் தேதி வரையுள்ள காலத்தில் ரூ.4,95,067-யை சுரேஷ் செலுத்தியுள்ளார்.

மேலும் ஒரு தனியார் வங்கியில் கணக்கு ஆரம்பிப்பதற்காக ரூ.1.55 லட்சம் சுரேஷ், தம்பதியினருக்கு கொடுத்துள்ளார். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூரில் நேரில் வந்து ரூ.1.50 லட்சம் சங்கரலிங்கம் பெற்றுள்ளார்.சங்கரலிங்கம், தான் கூறியபடி வங்கிக் கடன் பெற்று தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். மொபைல் போனில் தொடர்பு கொண்டால் சரியான பதிலளிக்காமல் ஏமாற்றி வருவதுடன், போலீஸில் புகார் கொடுத்தால் கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளார்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் எண் 2 நீதிமன்றத்தில் சுரேஷ் புகார் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கவிதா, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார். இதன்பேரில் போலீஸார் ஸ்ரீரங்கம், சங்கரலிங்கம் மற்றும் அவரது மனைவி ஜோதி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.