இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இளம் பெண்ணை ஆசிட் வீசி கொலை செய்துவிடுவதாக மிரட்டல்: சிங்கப்பூர் வாலிபர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணை ஆசிட் வீசி கொலை செய்து விடுவதாக மின்னஞ்சலில்

News image
Updated On :28 நவம்பர் 2014, 12:38 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணை ஆசிட் வீசி கொலை செய்து விடுவதாக மின்னஞ்சலில் மிரட்டல் விடுத்துள்ள சிங்கப்பூரில் வேலை செய்து வரும் இளைஞர் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்ததாக அவரது தாயார் மீதும் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பாப்பையநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் ரேணுகாதேவி (24). இவருக்கும் ஜமீன்நத்தம்பட்டி, முத்தால்ராஜ் என்பவரின் மகன் சதீஷ்குமார் என்பவருக்கும் 9 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயக்கப்படுள்ளது. சதீஷ்குமார் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் முத்தால்ராஜ் இறந்துவிட்டார். இதற்கு மகனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ரேணுகாதேவிதான் காரணம் என்று சதீஷ்குமாரின் தாயார் ராமர் அம்மாள் கூறியுள்ளார். இதனால் நிச்சயம் நடைபெற்றதை முறித்துக் கொண்டுள்ளார்கள்.

மேலும் சதீஷ்குமாரின் பழக்கவழக்கம் பிடிக்காததால் ரேணுகாதேவியும் அவரது உறவை சதீஷ்குமாருடன் முறித்துக் கொண்டுள்ளார்.

இதில் ஆத்திரமுற்ற சதீஷ்குமார், ரேணுகாதேவிக்கு யாருடன் திருமணம் நடக்கவோ, நடத்தவோ விடமாட்டேன் என்றும், ஆசீட் ஊற்றி ரேணுகாதேவியை கொலை செய்து விடுவேன் என்றும் மின்னஞ்சல் மூலம் மிரட்டியுள்ளார். இது குறித்து ரேணுகாதேவி

மல்லி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் மனு ரசீது மட்டும் போட்டு விசாரிப்பதாக கூறி அனுப்பிவிட்டார்களாம்.

இதனையடுத்து மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளையில் இது குறித்து ரேணுகாதேவி முறையிட்டார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது. இதன் பேரில் போலீஸார் சதீஷ்குமார் மற்றும் அவரது தாய் ராமர் அம்மாள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.