ஸ்ரீவில்லிபுத்தூர், நாடார் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில், நகரில் 600 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் திட்டம் தொடக்க விழா, இங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பெருமாள்பட்டி நாடார் உறவின்முறைத் தலைவர் மாயாண்டி தலைமை தாங்கினார். செயலாளர் ஏ.கலையரசன் முன்னிலை வகித்தார்.
சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஆர்.லெனின் செல்வராஜ், 600 மரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கி வைத்து வியாபாரிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கிப் பேசுகையில் கூறியதாவது: சங்கம் சார்பில் ஸ்ரீஆண்டாள் கோவிலுக்குச் சொந்தமான திருமுக்குளம் தற்போது பராமரிக்கப்பட்டு, பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.