விராலிமலை அருகே மண்ணெண்ணை அடுப்பு வெடித்து பள்ளி மாணவி சாவு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே சனிக்கிழமை மண்ணெண்ணை அடுப்பு வெடித்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே சனிக்கிழமை மண்ணெண்ணை அடுப்பு வெடித்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
விராலிமலை அருகே உள்ள வேலூரைச் சேர்ந்தவர் ராஜா(40) இவரது மகள் பிரியா(16) இவர் விராலிமலை பெண்கள் பள்ளியில் ப்ளஸ் ஒன் படித்து வருகிறார், இந்நிலையில் சனிக்கிழமை காபி போடுவதற்காக வீட்டில் இருந்த மண்ணெண்ணை அடுப்பை பற்றவைக்க முற்பட்ட போது எதிர்பாராத விதமாக ஸ்டவ் வெடித்து சிதறியதில் உடம்பு முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு அலறித் துடித்துள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை பிரியா உயிரிழந்தார், இதுகுறித்து விராலிமலை காவல் உதவி ஆய்வாளர் ந. புகழேந்தி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...