இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வாங்கியக் கடனை திருப்பித் தராத உயிர் தோழன் : ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரூ.2 லட்சம் வாங்கிக் கொண்டு நம்பிக்கை மோசடி செய்ததாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

News image
Updated On :4 பிப்ரவரி 2015, 11:31 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரூ.2 லட்சம் வாங்கிக் கொண்டு நம்பிக்கை மோசடி செய்ததாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம், தன்னாசி தெருவைச் சேர்ந்தவர் ஜவுளி வியாபாரி ச.பிச்சைக்கனி (59). இவரும் மம்சாபுரம் சிவந்திபட்டி நாடார் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அ.சேரன் செங்குட்டுவன் (59) என்பவரும் 30 ஆண்டுகள் நண்பர்கள்.

இந்நிலையில் சேரன் செங்குட்டுவன் புதிய வீடு கட்ட பிச்சைக்கனியிடம் ரூ.2 லட்சம் பெற்றுள்ளார். ஆனால் பணத்தைத் திரும்பத் தராமல் இழுத்தடித்து நம்பிக்கை மோசடி செய்தாராம்.

இது குறித்து ஜனவரி 7-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் நேரில் ஆஜராகி பிச்சைக்கனி புகார் மனு அளித்தார். மனுவை விசாரித்த நீதிபதி கவிதா, மம்சாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார்.

இதன் பேரில் போலீஸார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சேரன் செங்குட்டுவன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.