இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இரு சக்கர வாகனம் திருடிச்சென்ற இருவரை விரட்டி பிடித்த பொதுமக்கள்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காவல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த

News image
Updated On :5 பிப்ரவரி 2015, 7:00 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காவல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தைச் திருடிச் சென்ற இருவரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் மதுரையைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

குன்னூர், சின்னையாபுரம் காலனியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் சண்முகசுந்தரம் (50). இவர் சோடா தயாரித்து இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்று கடைகளுக்குப் போடும் தொழில் செய்து வருகிறார்.

தனது இரு சக்கர வாகனத்தை கிருஷ்ணன்கோவிலில், காவல் நிலையம் அருகே ஒரு கடை முன்பு நிறுத்திவிட்டு சோடா போட்டுக் கொண்டிருந்துள்ளார். பின்னர் திரும்பி வந்த போது இரு சக்கர வாகனத்தை இருவர் திருடிச் சென்று கொண்டிருந்துள்ளனர். அருகில் இருந்தவர்கள் துரத்திச் சென்று அவர்களைப் பிடித்து வந்து போலீஸில் ஒப்படைத்தனர்.

சண்முகசுந்தரம், கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மதுரை, ஆரப்பாளையம், சோனைகோவில் தோப்பைச் சேர்ந்த அய்யாவுத்தேவர் மகன் ராஜேஷ் (29) மற்றும் இதே இடத்தைச் சேர்ந்த கணபதி மகன் குமார் (36) ஆகியோரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.