இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

போலியான நம்பர் பிளேட்: ஸ்ரீவில்லிபுத்தூரில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை, காவல் துறை சார்பில்  வாகனப்பதிவு எண்களை பொறிப்பதில் போலியான நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி, துண்டு விநியோகம் செய்யப்பட்டது.

News image
Updated On :6 பிப்ரவரி 2015, 7:20 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை, காவல் துறை சார்பில்  வாகனப்பதிவு எண்களை பொறிப்பதில் போலியான நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி, துண்டு விநியோகம் செய்யப்பட்டது.

மத்திய அரசு அறிவித்துள்ள உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகை ஐ.என்.டி. இதுவரை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படவில்லை. எனவே உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகை என்ற குறியீடு கொண்ட போலி நம்பர் பிளேட்டுகளை வாகனங்களில் பொருத்துவது சட்டப்படி குற்றமாகும். அதே போல், நம்பர் பிளேட்டுகளை தயாரிப்பதும், விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றம் என்பதை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கோட்டம் சார்பில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. அதில் போலி நம்பர் பிளேட்டுகளின் மாதிரிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தத் துண்டுப் பிரசுரத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் தேரடி சந்திப்பு பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. கே.முரளிதரன் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கி தொடங்கி வைத்தார்.  இது குறித்து டி.எஸ்.பி முரளிதரன் கூறுகையில், மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கான ஐ.என்.டி என்று துவங்கும் உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட வில்லை.

எனவே இனிமேல் இது போன்ற உயர் பாதுகாப்பு குறியீட்டு பதிவு எண் பலகைகளை பயன்படுத்துவோர் மீதும், அதனை தயார் செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.