கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மீத்தேன் எடுப்பு திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழகஅரசு பொறுப்பேற்க வேண்டும்:  மேதா பட்கர்

தமிழகத்தில் மீத்தேன் எடுப்பு திட்டத்தை தடுத்து நிறுத்த மக்கள் சார்பில் தமிழகஅரசு பொறுப்பேற்க வேண்டும் என மனித உரிமை போராளியும், நர்மதை அணை போராட்டக்குழுத் தலைவருமான

News image
Updated On :8 பிப்ரவரி 2015, 11:35 am

ஜி.சுந்தரராஜன்

தமிழகத்தில் மீத்தேன் எடுப்பு திட்டத்தை தடுத்து நிறுத்த மக்கள் சார்பில் தமிழகஅரசு பொறுப்பேற்க வேண்டும் என மனித உரிமை போராளியும், நர்மதை அணை போராட்டக்குழுத் தலைவருமான மேதாபட்கர் தெரிவித்தார்.

சிதம்பரத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

மீத்தேன் எடுப்பு திட்டம் குறித்து தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் என்னிடம் புதுதில்லியில் சந்தித்து முறையிட்டனர். அதன்படி அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழக காவிரி படுகையில் பயணம் மேற்கொள்ள வந்துள்ளேன். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் தஞ்சை, நாகை,திருவாரூர் மாவட்டங்களில் சுமார் 2 ஆயிரம் இடங்களில் 2 ஆயிரம் அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து கெமிக்கல் நீரை உள்ளே செலுத்தி பாறைகளை தகர்த்து மீத்தேன் எடுக்கப்படவுள்ளது. நீரை உள்ள செலுத்தி நீரை உறிஞ்சும் போது நிலத்தடி நீரும், மேல்மட்டத்தில் உள்ள நீரும் பாதிக்கப்படுகிறது.

இதனால் காவிரி டெல்டா படுகையில் உள்ள சுமார் 24 லட்சம் ஏக்கர் விவசாயம் பாழாகி பாலைவணமாக மாறிவிடும். குடிநீர், மக்களின் வாழ்வாதரம் முற்றிலும் பாதிக்கப்படும்.

மக்களின் போராட்டம் மற்றும் எதிர்ப்புகளை மத்திய, மாநில அரசுகள் காதில் வாங்காமல் பணிகளை தொடர்ந்து வருகிறது. திட்டம் தொடங்கும் முன்பு இப்பகுதி மக்களிடையே கருத்து கேட்கப்படவில்லை. இது ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும். இத்திட்டம் ஐரோப்பா நாடுகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தடை செய்யப்பட்ட திட்டமாகும். இத்திட்டத்தை மக்கள் சார்பில் பொறுப்பேற்று தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழகஅரசு காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். மத்தியஅரசு மீத்தேன் எடுப்பு திட்டத்தை கைவிட வேண்டும்.விவசாயத்தை பாதிக்கும் மத்தியஅரசின் நிலம் கையக்கபடுத்தல் -2015 திட்டத்தை அரசு திரும்பப்பெற வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற பிப்.24-ம் தேதி புதுதில்லியில் நாடாளுமன்றம் அருகே விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தவுள்ளேன். கங்கை, காவிரி நதிநீர் இணைப்பினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் அதனை நாங்கள் எதிர்க்கிறோம்.அதேவேளை ஏற்கனவே உள்ள நதிநீர் ஒப்பந்தங்களை மாநில அரசுகள் மதிக்க வேண்டும். நதிநீர் பங்கீட்டில் அரசியல்வாதிகளின் சுயஅரசியலால் மக்கள் பலியாகப்படுகிறார்கள். எனவே நதிநீர் பங்கீடு குறித்து இருமாநில அரசுகளும் சமூகமுறையில் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என மேதா பட்கர் தெரிவித்தார்.

முன்னதாக மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரான சமூக போராளியான மேதாபட்கர் சிதம்பரத்தில் மீத்தேன் தி்ட்ட எதிர்ப்பு பரப்புரை இயக்கத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை காலை ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அணுஉலை போராட்டக்குழுவைச் சேர்ந்த கேபிரில்லா, லெனின், மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், ஆலோசகர்கள் பொறியாளர் திருநாவுக்கரசு, மருத்துவர் பாரதிசெல்வன்,சாக்கோட்டை இளங்கோவன், தமிழத் தேசிய பேரியக்க பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், சிதம்பரம் நகர அமைப்பாளர் கு.சிவப்பிரகாசம், தமிழர் தேசிய முன்னணி நிர்வாகிகள் கலைச்செல்வன், ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.