இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 30 வழக்குகளில் ரூ.41.86 லட்சம் வழங்க உத்தரவு

விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட சட்டப்

News image
Updated On :15 பிப்ரவரி 2015, 6:50 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு கட்டடத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 30 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.41,86,763 வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான ஆர்.தாரணி, தலைமை குற்றவியல் நீதிபதி ஜான் ஆர்.டி. சந்தோஷம் ஆகியோர் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி எஸ்.கோவிந்தராஜன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்.சாமுவேல் பெஞ்சமின், மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ்.பத்மா, நீதித்துறை நடுவர் கே.கவிதா, ஓய்வு பெற்ற சார்பு நீதிபதி எம்.சந்திரன், வழக்குரைஞர் எஸ்.ராமசுப்பிரமணியன், சமூக நல அலுவலர் எஸ்.மகாலிங்கம் ஆகியோர் முன்னிலையில் மக்கள் நீதிமன்ற் நடைபெற்றது.

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வங்கி வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 255 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 30 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.41,86,763 வழங்க உத்தரவுகள் வழங்கப்பட்டது.

மேலும் வங்கிகளில் நிலுவையில் உள்ள 1155 வராக் கடன் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 157 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.1,13,80,457-க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் ரூ.13,06,450 உடனடியாக வசூலிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.