இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆண்டாள் கோவிலில் பள்ளி மாணவர்களுக்கான திருப்பாவை போட்டி

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோவிலில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மாணவ மாணவியருக்கான திருப்பாவை போட்டி தக்கார் கே.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2015, 8:39 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோவிலில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மாணவ மாணவியருக்கான திருப்பாவை போட்டி தக்கார் கே.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆண்டாள் கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு திருப்பாவை போட்டிகள் நடத்தப்படும். இந்த ஆண்டு இப் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களுக்கு திருப்பாவை புத்தகங்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே வழங்கப்பட்டு, திருப்பாவை வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டது.

இதில் முதல் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பல்வேறு பிரிவுகளாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு, அவர்களது வயது மற்றும் வகுப்புக்கு ஏற்றவாறு போட்டிகள் நடத்தப்பட்டது. திருப்பாவை எண்ணைக் கூறி திருப்பாவையை கேட்டல், திருப்பாவையைக் கூறி எண்ணைக் கேட்டல், திருப்பாவையை மனப்பாடமாக ஒப்புவித்தல் என போட்டிகள் நடத்தப்பட்டது.

போட்டியை கோவிலின் சுதர்ஸன் பட்டர் நடத்தினார். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு செயல் அலுவலர் ராமராாஜா பரிசுகளை வழங்கினார். மேலும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கே.ரவிச்சந்திரன் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.