இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முன்பு பேரணியை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜாகுணசீலன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர்

News image
Updated On :12 ஜனவரி 2015, 2:51 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 4 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் மாவட்ட கல்வித் துறை இணைந்து இந்த பேரணியை நடத்தின.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முன்பு பேரணியை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜாகுணசீலன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில், நகர்மன்ற தலைவி வி.செந்தில்குமாரி மற்றும் வெ.பொன்னுப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

பேரணியில் நகரில் உள்ள பள்ளிகள் மற்றும் செவிலியர் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரம் மாணவ மாணவியர், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியே வந்து மீண்டும் ஆண்டாள் சன்னதியை அடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவியர் டெங்கு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக் கொண்டும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும் சென்றனர். மேலும் நகர் முழுவதும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.