இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணி: நகர்மன்ற தலைவி தொடங்கி வைத்தார்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியை நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி தொடங்கி வைத்தார். நகர்மன்ற திரு.வி.க. தொடக்கப் பள்ளியில் இந்த சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்து நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி பேசுகையில் கூறியதாவது:

News image
Updated On :14 ஜனவரி 2015, 4:56 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியை நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி தொடங்கி வைத்தார். நகர்மன்ற திரு.வி.க. தொடக்கப் பள்ளியில் இந்த சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்து நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி பேசுகையில் கூறியதாவது:

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகள், ஆதரவற்றோர் விடுதிகள், மாணவ மாணவியர் விடுதிகளில் இந்த நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் பேருந்து நிலையம், முக்கியமான சந்திப்புகளில் இதற்கான சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலவேம்பு குடிநீரை தொடர்ந்து 3 முதல் 5 நாட்கள் குடித்து வந்தால், டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்கலாம். இந்த நீர் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும். ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக நில வேம்பு பொடியை பொதுமக்கள் பெற்று, வீட்டிலேயே நீரை கொதிக்கவைத்து அதில் பொடியைப் போட்டு அருந்தலாம் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் வி.டி.முத்துராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராஜாகுணசீலன், நகராட்சி ஆணையாளர் பழனிவேல், துணைத் தலைவர் சரோஜா நடராஜன், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.