இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மது குடிக்க பணம் தராதவருக்கு அரிவாள் வெட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி, யாதவர் கீழத் தெருவைச் சேர்ந்தவர் மோகன்தாஸ் மகன் அருண் (27). இவர் சொந்தமாக வேன் வைத்து தீப்பெட்டி ஆலைக்கு ஆட்களை அழைத்துச் செல்லும்

News image
Updated On :16 ஜனவரி 2015, 8:41 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மது குடிக்க பணம் கொடுக்காதவரை அரிவாளால் வெட்டிய நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி, யாதவர் கீழத் தெருவைச் சேர்ந்தவர் மோகன்தாஸ் மகன் அருண் (27). இவர் சொந்தமாக வேன் வைத்து தீப்பெட்டி ஆலைக்கு ஆட்களை அழைத்துச் செல்லும் தொழில் செய்து வருகிறார்.

இங்குள்ள பெரியகுளம் கண்மாய்க்குச் சென்றுள்ளார். அங்கு வந்த கூமாப்பட்டி, இமானுவேல் தெருவைச் சேர்ந்த போஸ் மகன் ரமணி என்பவர், அருணிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அருண் தன்னிடம் ரூ.50 மட்டுமே உள்ளது என்று கூறிவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்துள்ளார். ராமசாமியாபுரம் டி.இ.எல்.சி. பள்ளி தெரு அருகே வந்து கொண்டிருந்தபோது, அருணை ரமணி வழிமறித்துள்ளார். என்னைப் பார்த்து பயம் விட்டுப் போய்விட்டதா? குடிக்க பணம் கேட்டால் தரமாட்டியா? என்று கூறி, அரிவாளால் அருணை வெட்டியுள்ளார். இதில் காயமுற்ற அருண் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கூமாப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரமணியைத் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.