இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அதிமுக ஊராட்சி செயலாளரை பயங்கர ஆயுதங்களுடன் வழி மறித்து மிரட்டியதாக திமுக ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அதிமுக ஊராட்சி செயலாளரை பயங்கர ஆயுதங்களுடன் வழி மறித்து மிரட்டியதாக திமுக ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட 5 பேர் மீது

News image
Updated On :18 ஜனவரி 2015, 1:43 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அதிமுக ஊராட்சி செயலாளரை பயங்கர ஆயுதங்களுடன் வழி மறித்து மிரட்டியதாக திமுக ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லி-ராமகிருஷ்ணாபுரம் அதிமுக ஊராட்சி செயலாளராக இருப்பவர் ச.ராஜேந்திரன் (54). இவருக்கும் இதே இடத்தைச் சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் திமுக ஒன்றியச் செயலாளர் கு.ஆறுமுகத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் மல்லி கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கி அருகே ராஜேந்திரன் வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது திமுக ஒன்றியச் செயலாளர் மல்லி கு.ஆறுமுகம், ஆறுமுகம் மகன்கள் ராமர், ராஜ்குமார், முத்தையா மகன் குருசாமி, கு.செந்தில் ஆகியோர் உருட்டுக் கட்டை, வீச்சு அரிவாளுடன் வந்து, ராஜேந்திரனை வழிமறித்து அதிமுக ஆட்சி என்று ஆடுகிறீர்களா? ஒழுங்கா இல்லை என்றால் தொலைத்து விடுவோம் என்று கூறி மிரட்டினார்களாம்.

இது குறித்து மல்லி காவல் நிலையத்தில் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் மகேஸ்வரி, மல்லி ஆறுமுகம் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.